இலங்கை
இராமநாதபுரத்தில் சடலமொன்று மீட்பு
இராமநாதபுரத்தில் சடலமொன்று மீட்பு
கிளிநொச்சி- இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்டப் பகுதியில், நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்குள் இருந்து ஆணொருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னரே அவர் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.