இலங்கை

தண்ணீர்த் தொட்டியிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

Published

on

தண்ணீர்த் தொட்டியிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள ஆள்களில்லாத வீட்டுத் தண்ணீர்த் தொடர்டியிலிருந்து இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் ஜீவன்சன் (வயது-20) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தந்தையின் வேலைத்தளத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு தெல்லிப்பழையில் உள்ள குறித்த வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே அந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version