இலங்கை

அநியாயமாக பறிக்கப்பட்ட யுவதியின் உயிர்; ஈவிரக்கமற்ற செயல்

Published

on

அநியாயமாக பறிக்கப்பட்ட யுவதியின் உயிர்; ஈவிரக்கமற்ற செயல்

வீதியில் இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (02) மாலை இரத்தினபுரியில் குருவிட்ட தெவிபஹல – தொடன்எல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

காயமடைந்த யுவதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் குருவிட்ட – தெவிபஹல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஆவார்.

யுவதியின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version