இலங்கை
புத்துயிர் பெறும் சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
புத்துயிர் பெறும் சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்
நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் திருகோணமலை – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (1) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.
சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.